யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்( Sri Lanka Rupavahini Corporation ) புதிய தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்( Sri Lanka Rupavahini Corporation )  புதிய தலைவராக சொனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் இலங்கை தேசிய நூலகத்தின் ( National Library of Sri Lanka) தலைவராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
சொனால குணவர்தன இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

அவர் கொழும்பு றோயல் கல்லூரியின் ( Royal College) பழைய மாணவரும் கொழும்பு பல்கலைக்கழக( University of Colombo) சட்ட பீடத்தில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றவருமாவார்.

சீனாவின் ஷென்யாங் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் ( Shenyang Aerospace University) வணிக முகாமைத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

அவர் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் நிர்வாக நிலை பதவிகளை வகித்துள்ளார் ...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் இளைய தலைவராக சொனால குணவர்தன வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.