யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டக்களத்தில் பஸ் வண்டிக்கும் தீ வைப்பு!


நாட்டின் ஜனாதிபதி என்றும் பாரமால் "பைத்தியக்காரானே வெளியே வா!!" என்று பொது மக்கள் கூக்குரலிடுமளவுக்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.

இராணுவ வாகனம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. 
அந்த தொடரில், மிரிஹானவில் தொடங்கிய போராட்டம்
களனி, கொழும்பு-கண்டி வீதி, அமைச்சர்களின் வீடுகள் என்று விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது....

பிந்திய செய்திகளின் படி தற்போது நுகேகொட உள்ளிட்ட கொழும்பின் பல்வேறு பிரதேசங்களில் கேர்பியூ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஞாயிறு வரை நாடு தாங்காது, மக்கள் பொறுக்க மாட்டார்கள் போல் இருக்கிறது நாட்டு நிலமை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு

நெல் பயிரிட முடியாத நிலங்களில் பச்சைப்பயறு பயிரிடுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு...

🖲இன்று மின்சாரம் துண்டிப்பு ஏற்படும் அபாயம்.