இடுகைகள்

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!!

படம்
எரிபொருளுக்காக காத்திருந்த  வாகனங்களை சேதப்படுத்திய காட்டு  யானைகள்!! மட்டக்களப்பு - வெல்லாவெளி  பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக  வரிசையில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை காட்டு யானைகள் இன்று (29) அதிகாலை  வேளையில்  சேதமாக்கியுள்ளது. குறித்த யானை தாக்குதலின் போது எவருக்கும் பாதிப்பு எற்படாத போதும்  வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மோட்டார் வண்டிகளில் இரு வண்டிகள் முழுமையாகவும் ஏனைய வண்டிகள் பகுதி அளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தெரிவு...

படம்
இந்திய பழங்குடியினத்தைத் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரானார்! ------------------------------------------------------------------------- இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவியாக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு (Draupadi Murmu) தேர்வானார்.  இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரைத்  தேர்வு செய்வதற்காக ஜூலை 18ம் நாள் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர், பெரும்பாண்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவி என்ற பெருமையை பெற்று உள்ளார். ஓடிசா மாநிலத்தின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் பிறந்த திரௌபதி முர்மு, இருபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் செயற்பட்டுவரும் இவர், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றினார். அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஒரு சாதாரண...

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

படம்
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார் இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அமெரிக்காவில் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 19 பேர் பலி

படம்
அமெரிக்காவில் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 19 பேர் பலி அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்பபாடசாலைமாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உவல்டே நகரில் உள்ள ரொப் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது 18 வயது நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். பின்னர் அவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐந்து முதல் 11 வயது மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில் துப்பாக்கி பிரயோகம் வழமைக்கு மாறான விடயம் என்பதால் இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி பிரயோகம் ஆரம்பித்ததும் அருகிலிருந்த அமெரிக்க எல்லை காவல்படையினர் அந்த பகுதிக்கு விரைந்து அந்த நபரை சுட்டுக்கொன்றனர் என ஏபி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நபர் பாடசாலைமீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு தனது குடும்ப உறுப்பினர் ஒருவரையும் சுட்டுக்கொன்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் கைத்துப்பாக்கி மற்றும்  ஏஆர்15 ரக துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் தனியாக இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கையில் ...

பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம்
பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருந்த  பல்கலைக்கழக மாணவியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது. உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் இது வரை தெரியவராத நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 🚨யாழ் பல்கலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பாக தெரியவருகையில் யாழ் பல்கலையில் இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டு மாணவி தனுஜா என்பவர் சற்றுமுன்னர் யாழ்பாண பலகலைக்கழக்கத்துக்கு அருகிலுள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  வீட்டிலிருந்து பலகலைக்கழகம் செல்வதாக கூறி யாழ்ப்பணம் வந்த குறித்த மாணவி தனது அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு காற்றாடியில் துணி மாட்டி தற்கொலை செய்துள்ளார...

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கூலர் லொறியை ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

படம்
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய ரயில்  Alawwa ரயில் நிலையத்துக்கு அண்மையில் Gorokgasdeniya  உள்ள வீதி புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கூலர் லொறியை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் லொறியின்  சாரதி படுகாயமடைந்து அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

CEYPETCO: எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!!

படம்
CEYPETCO: எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!! இன்று (19) முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது. அதற்கமைய பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 254 இருந்து ரூ. 338 (ரூ. 84 ஆல்) ஒக்டேன் 95: ரூ. 283 இருந்து ரூ. 373 (ரூ. 90 ஆல்) டீசல் ஒட்டோ டீசல்: ரூ. 176 இருந்து ரூ. 289 (ரூ. 113 ஆல்) சுப்பர் டீசல்: ரூ. 254 இருந்து ரூ. 329 (ரூ. 75 ஆல்)அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே நேற்று நள்ளிரவு (18) முதல் லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.