இடுகைகள்

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞான பாட ஆசிரியர் வீ. பரனீதரன் பதுளையில் ஏற்பட்ட கார் விபத்தில் பலி!!

படம்
பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். பசறை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் பேருந்து விபத்துக்குள்ளாகி 13 ப...

விபத்தில் சிக்கி உயிரிழந்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன!

படம்
விபத்தில் சிக்கி உயிரிழந்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பொது மயானத்துக்கு முன்பாக இன்று (17) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பி.எச்.பியசேன, பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலன்னறுவையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பியசேன அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலசேற்றுப் பகுதி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது..!

படம்
கண்டி, அலவத்துகொட  பிரதேசத்தில் உள்ள வயல் நிலசேற்றுப்  பகுதி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில்  இளம் பெண்ணொருவரின் சடலம்   கண்டெடுக்கப்பட்டுள்ளது..! (25) வயதுடைய இளம் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல் வீட்டிலிருந்து சுமார்  100 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் புதைக்கப்பட்டுள்ளது. அலாவத்துகொட விளான பல்லேகம அல்லேகடே பகுதியில் வசிக்கும் தனுக வதுவந்தி ஜயதிலக்க என்ற (25) வயதுடைய திருமணமான பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவு கிராமத்தில் உள்ள மரண வீட்டிற்கு சென்று திரும்பிய போது மனைவி வீட்டில் இல்லை எனவும் கணவர் குழந்தைகள் # இல்லை தாங்கள் தனியாக வீட்டில் வசித்து வருவதாக பொலிசாரியிடம் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து  இந்த கொடூர கொலை சம்பவதில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை விசாரித்து வருகிறார்கள் எனவே சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  அலவத்துகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரயில் கழிவறையிலிருந்து சிசு மீட்பு; தாயும் தந்தையும் கைது!

படம்
ரயில் கழிவறையிலிருந்து சிசு மீட்பு; தாயும் தந்தையும் கைது கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் கழிவறையிலிருந்து சிசு ஒன்று நேற்று (10) மீட்கப்பட்டிருந்தது அந்த சிசுவின் தாயும் தந்தையும் வெவ்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  25 வயதான தாய் பண்டாரவளையிலும் 26 வயதான தந்தை கொஸ்லந்தையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மிகப் பெரும் பயணிகள் கப்பலான பிரின்சஸ் குரூஸ் 1,800 பயணிகளுடன் இலங்கை வந்துள்ளது.

படம்
மிகப் பெரும் பயணிகள் கப்பலான பிரின்சஸ் குரூஸ் 1,800 பயணிகளுடன் இலங்கை வந்துள்ளது.   1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிய கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 159 சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதுடன் அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர். அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் தாய்லாந்தில் இருந்து வந்துள்ளதாகவும், கப்பல் இன்று இரவு துபாய்க்கு புறப்பட உள்ளதாகவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் குண்டுவெடிப்பில் 17 பேர் பலி, 140க்கும் மேற்பட்டோர் காயம்

படம்
பங்களாதேஷ் குண்டுவெடிப்பில் 17 பேர் பலி, 140க்கும் மேற்பட்டோர் காயம் பங்களாதேஷ் டாக்காவில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் செறிந்து வாழும் பகுதிக்கு அருகாமையில் உள்ள 07 மாடிக் கட்டிடத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு மாடிகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெடித்ததை அடுத்து 200 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 11 தீயணைப்பு பிரிவுகள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏழு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷில் பயங்கர தீ விபத்து12000 அகதி குடியிருப்புகள் நாசம்.

படம்
பங்களாதேஷில் பயங்கர தீ விபத்து 12000 அகதி குடியிருப்புகள் நாசம் பங்களாதேஷில், மியன்மாரின் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த முகாமில் ஏற்பட்ட தீயினால் சுமார் 2,000 குடியிருப்புகள் அழிவடைந்துள்ளன.  இதனால் சுமார் 12,000 பேர் தங்குமிடங்களை இழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குட்டுபலோங் நகரிலுள்ள அகதிகள் முகாமில்  நேற்று பிற்பகல் இத்தீ பரவ ஆரம்பித்தது.  இத்தீயினால் 2000 குடியிருப்புகள் தீக்கிரையாகி அழிந்துள்ளதாகவும், 12,000 பேர் தங்குமிடங்களை இழந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பங்களாதேஷின் அகதிகள் ஆணையாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்துடன் குறைந்தபட்சம் 35 பள்ளிவாசல்கள், 21 கற்கை நிலையங்களும் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறினார். 2021 ஜனவரி முதல் 2022 டிசெம்பர் வரை ரோஹிங்யா அதிகள் முகாமில் 222 தீப்பரவல் சம்பவங்கள் இடம்பெற்றதாக பங்களாதேஷ் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இவற்றில் 60 சம்பவங்களில் வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டிருந்ததாகவும் அவ்வமைச்சு தெரிவித்திருந்தது.