இடுகைகள்

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர் விபத்தில் உயிரிழப்பு.

படம்
கொழும்பு கடவத்தை வெளிவட்ட வீதியில்  16 ஆம் கிலோமீற்றர் சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணித்த லொறியுடன் பின்னால் வேகமாக பயணித்த கார் மோதியதில் கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.  டைல்ஸ் ஏற்றப்பட்ட லொறி மாத்தறையிலிருந்து கடவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​அதே திசையில் பின்னால் வந்த சொகுசு கார் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தை பகுதியை  சேர்ந்த கிதானி மானெல் பிரியந்தி (வயது 47) என்ற ஒரு பிள்ளையின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியராவர்.    லொறி மீது கார் மோதியதால் கார் மோசமாக சேதமடைந்ததுடன் காரின் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கார் சாரதியின் கவனக்குறைவு மற்றும் அதிவேகமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள்......!

படம்
தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள்......! தெற்கு தாய்லாந்தில் இன்று 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் பெற்றோல் வரிசையில் நடந்த பகீர் சம்பவம்; மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி!

படம்
கொழும்பில் பெற்றோல் வரிசையில் நடந்த பகீர் சம்பவம்; மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி! கொழும்பில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரின் சாரதி ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காரொன்றில் சாரதியொருவர் காத்திருந்துள்ளார். இந்நிலையில், குறித்த கார் தரித்து நின்ற பகுதியில் கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இதன்போது கட்டிட நிர்மாணப் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்புக் குழாய்யொன்று மேலிருந்து கீழ்நோக்கி காரின் மீது வீழந்துள்ளதில் காரின் முன்பக்க கண்ணாடியை துழைத்துக்கொண்டு சாரதியின் இருக்கையை நோக்கி வந்துள்ளது. இந்நிலையில் சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!!

படம்
எரிபொருளுக்காக காத்திருந்த  வாகனங்களை சேதப்படுத்திய காட்டு  யானைகள்!! மட்டக்களப்பு - வெல்லாவெளி  பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக  வரிசையில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை காட்டு யானைகள் இன்று (29) அதிகாலை  வேளையில்  சேதமாக்கியுள்ளது. குறித்த யானை தாக்குதலின் போது எவருக்கும் பாதிப்பு எற்படாத போதும்  வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மோட்டார் வண்டிகளில் இரு வண்டிகள் முழுமையாகவும் ஏனைய வண்டிகள் பகுதி அளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தெரிவு...

படம்
இந்திய பழங்குடியினத்தைத் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரானார்! ------------------------------------------------------------------------- இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவியாக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு (Draupadi Murmu) தேர்வானார்.  இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரைத்  தேர்வு செய்வதற்காக ஜூலை 18ம் நாள் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர், பெரும்பாண்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவி என்ற பெருமையை பெற்று உள்ளார். ஓடிசா மாநிலத்தின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் பிறந்த திரௌபதி முர்மு, இருபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் செயற்பட்டுவரும் இவர், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றினார். அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஒரு சாதாரண...

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

படம்
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார் இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அமெரிக்காவில் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 19 பேர் பலி

படம்
அமெரிக்காவில் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் - 19 பேர் பலி அமெரிக்காவின் டெக்ஸாசில் உள்ள ஆரம்பபாடசாலைமாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உவல்டே நகரில் உள்ள ரொப் ஆரம்பபாடசாலை மாணவர்கள் மீது 18 வயது நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். பின்னர் அவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐந்து முதல் 11 வயது மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளில் துப்பாக்கி பிரயோகம் வழமைக்கு மாறான விடயம் என்பதால் இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி பிரயோகம் ஆரம்பித்ததும் அருகிலிருந்த அமெரிக்க எல்லை காவல்படையினர் அந்த பகுதிக்கு விரைந்து அந்த நபரை சுட்டுக்கொன்றனர் என ஏபி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நபர் பாடசாலைமீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு தனது குடும்ப உறுப்பினர் ஒருவரையும் சுட்டுக்கொன்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் கைத்துப்பாக்கி மற்றும்  ஏஆர்15 ரக துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் தனியாக இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கையில் ...