இடுகைகள்

யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு.

படம்
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம் ! வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் நெடுந்தீவுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செயற்திட்ட உதவியாளர்கள் [PROJECT ASSISTANTS] ஆகிய எமக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்?

படம்
செயற்திட்ட உதவியாளர்கள் [PROJECT ASSISTANTS] ஆகிய எமக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்? "යහපාලන සමයේ බඳවා ගැනීමට නිර්දේශ කළ පුහුණු ව්‍යාපෘති සහයකයින්ට මොකද වුණේ?" What happened to the Trainee Project Assistant recruitments which planned in Yahapalana government  During the yahapalana government time there was programme to recruit 7500 trainee project assistants. Though the interviews 6547 have been selected ,Due to the Elections the appointment's were  temporarily  halted. The Election commission has announced after the Presidential Election the appointments could be given. Mr Premadasa questioned the progress of those appointments . தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குங்கள்   நாடு முழுவதும் பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் விண்ணப்பங்கள் கோரப்பட்டு பிரதமரின் அலரி மாளிகையில் ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் இரண்டு நேர்முகத் தேர்வுகள் இடம் பெற்று புரட்டாதி மாதம் 16ம் திகதி (2019.09.16) அகில இலங்கை ரீதியாக பயிலுனர் செய...

நல்லாட்சியின் போது ஆட்சேர்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்களுக்கு என்ன நடந்தது? -சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

படம்
நல்லாட்சியின் போது ஆட்சேர்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட பயிலுநர் உதவியாளர்களுக்கு என்ன நடந்தது?" கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 7,500 பேரை பயிலுநர் திட்ட உதவியாளர்களாக நியமிக்கும் திட்டத்தை ஆரம்பித்ததாகவும்,இதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலம் 6,547 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் எனவும்,அப்போது தேர்தல் அறிவிப்பு வெளியானதால்,தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும்,ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நிலையில்,மீண்டும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது நிலையில், அதன் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார். "යහපාලන සමයේ බඳවා ගැනීමට නිර්දේශ කළ පුහුණු ව්‍යාපෘති සහයකයින්ට මොකද වුණේ?" What happened to the Trainee Project Assistant recruitments which planned in Yahapalana government ? During the yahapalana government time there was programme to recruit 7500 trainee project assistants. Though the interviews 6547 have been selected ...

வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர் விபத்தில் உயிரிழப்பு.

படம்
கொழும்பு கடவத்தை வெளிவட்ட வீதியில்  16 ஆம் கிலோமீற்றர் சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணித்த லொறியுடன் பின்னால் வேகமாக பயணித்த கார் மோதியதில் கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.  டைல்ஸ் ஏற்றப்பட்ட லொறி மாத்தறையிலிருந்து கடவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​அதே திசையில் பின்னால் வந்த சொகுசு கார் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தை பகுதியை  சேர்ந்த கிதானி மானெல் பிரியந்தி (வயது 47) என்ற ஒரு பிள்ளையின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொரிய மொழி கற்பிக்கும் ஆசிரியராவர்.    லொறி மீது கார் மோதியதால் கார் மோசமாக சேதமடைந்ததுடன் காரின் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கார் சாரதியின் கவனக்குறைவு மற்றும் அதிவேகமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள்......!

படம்
தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள்......! தெற்கு தாய்லாந்தில் இன்று 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் பெற்றோல் வரிசையில் நடந்த பகீர் சம்பவம்; மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி!

படம்
கொழும்பில் பெற்றோல் வரிசையில் நடந்த பகீர் சம்பவம்; மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி! கொழும்பில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரின் சாரதி ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காரொன்றில் சாரதியொருவர் காத்திருந்துள்ளார். இந்நிலையில், குறித்த கார் தரித்து நின்ற பகுதியில் கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இதன்போது கட்டிட நிர்மாணப் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்புக் குழாய்யொன்று மேலிருந்து கீழ்நோக்கி காரின் மீது வீழந்துள்ளதில் காரின் முன்பக்க கண்ணாடியை துழைத்துக்கொண்டு சாரதியின் இருக்கையை நோக்கி வந்துள்ளது. இந்நிலையில் சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!!

படம்
எரிபொருளுக்காக காத்திருந்த  வாகனங்களை சேதப்படுத்திய காட்டு  யானைகள்!! மட்டக்களப்பு - வெல்லாவெளி  பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக  வரிசையில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை காட்டு யானைகள் இன்று (29) அதிகாலை  வேளையில்  சேதமாக்கியுள்ளது. குறித்த யானை தாக்குதலின் போது எவருக்கும் பாதிப்பு எற்படாத போதும்  வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மோட்டார் வண்டிகளில் இரு வண்டிகள் முழுமையாகவும் ஏனைய வண்டிகள் பகுதி அளவிலும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தெரிவு...

படம்
இந்திய பழங்குடியினத்தைத் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரானார்! ------------------------------------------------------------------------- இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவியாக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு (Draupadi Murmu) தேர்வானார்.  இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரைத்  தேர்வு செய்வதற்காக ஜூலை 18ம் நாள் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர், பெரும்பாண்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவி என்ற பெருமையை பெற்று உள்ளார். ஓடிசா மாநிலத்தின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் பிறந்த திரௌபதி முர்மு, இருபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் செயற்பட்டுவரும் இவர், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றினார். அதன் பின்னர் அரசு ஊழியராக நீர்வளம் மற்றும் மின்சார துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர். பின்னர் ஒரு சாதாரண...